Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
21 février 2007

தமிழீழம் தான் முடிஞ்ச முடிவெண்டு சொல்லி ஆயுதம்

thevathasan

தமிழீழம் தான் முடிஞ்ச முடிவெண்டு சொல்லி ஆயுதம் தூக்கி போராட வெளிக்கிட்டு இருபத்தைஞ்சு வருசம் முடிஞ்சு போச்சு. இந்த காலகட்டத்துக்குள் எத்தைனையோ நல்லது கெட்டது நடந்து முடிஞ்சிருக்கு. இந்த நல்லது கெட்டதயெல்லாம் கணக்குக் கூட்டிப் பார்த்தால் மிஞ்சி நிக்கிறது கெட்டவையல்தான். இந்தா பொங்கலுக்குள்ள பிடிக்கிறம், தீவாளிக்குள்ள பிடிக்கிறம் எண்டு சொல்லி…!  கந்தசட்டி விரதம் புடிச்சதைத்தவிர வேற ஒண்டும் உருப்படியா புடிக்கையில்லை. நாடு புடிக்க வெளிக்கிட்டு எல்லாம் நாசமாப் போனதுதான் மிச்சம்.

யாப்பாணத்தில இருக்கிற படிச்ச உதவாக்கரையல் எல்லாம் சோசலிசம், கொம்மினிசம் பேசி கடைசியா கப்பிற்றலிசா மாறீட்டினம். அதிலும் குறிப்பா புரட்சி, சுதந்திரம், சோசலிசம் பேசி தங்கட புத்தகப் பூச்சித்தனத்தை அப்பாவிச் சனங்களுக்கு புகட்ட வெளிக்கிட்ட பல பேர் கொஞ்ச நாளிலேயே வெளிநாடுகளுக்கு  பறந்திட்டினம். வெள்ளை வேட்டி கட்டி சிவப்பு சால்வை போத்து வெள்ளாளக் கொம்மினிசம் பேசியவை இல்லாமல் போக, ரவுசரும், சேட்டும் போட்டு புலம் பெயர் நாடுகளிலும் வெள்ளாளக் கொம்மினிசம் பேசித்திரியினம்.

என்ன இருந்தாலும் புலி எண்ட பேரில பெரிய கவர்ச்சி இருக்கத்தான் செய்யுது. உந்த யாப்பாண வெள்ளாளர் புலிகள் இயக்கத்தை எப்படி விமர்சிச்சாலும் தாங்களும் ஒரு பெரும் புலி எண்டுதான் நினைச்சுக் கொண்டு இருக்கினம். புலிகளில பாருங்கோ கனக்க ரகம் இருக்கு.

விளம்பரப் புலிகள்

வியாபாரப் புலிகள்

விவேகப் புலிகள்

வெகுளிப் புலிகள்

கலாச்சாரப் புலிகள் என்பதாக

விளம்பரப் புலிகள்
இவர்களில்  பலர் அதீத கற்பனைத்திறன் கொண்டவையல். கார்ல் மாக்சின்ர தத்துவத்தை தங்களைத்தவிர வேறு ஒருத்தருக்கும் சரியா விளங்கயில்ல எண்டதுதான் இவையின்ர விளக்கம். அது ரசியாவில இருக்கிறவயா யிருந்தாலும், சீனாவில இருகிறவயா யிருந்தாலும் அதாவது லெனின், றொக்சி, மாவோ இவையள் கூட சரியான முறையில மக்கள் நலன் அடிப்படையில செயல் திட்டங்களை சிந்திக்க இல்லையாம். தங்களுக்கு மட்டுந்தான் அந்த மகத்தான மக்கள் நலன்-திட்டங்கள் தெரியுமாம். அதையும் பொக்கற்றுக்க றெடியா கொண்டு திரியினமாம்...ஏன் பொக்கற்றுக்க கொண்டு திரியிறியள் றங்குப் பெட்டிக்க பூட்டி பத்திரமா வைச்சிருங்கோ. இன்னும் ஆயிரம் வருசத்திற்கும் அது அசையாமல் இருக்கும்.

இவையல் பாருங்கோ குண்டி துடைக்கிற பேப்பர்கூட ஏகாதிபத்தியத்திட்ட எதிர்பார்க்கிற ஆக்கள். கக்கூசுக்கு வராட்டாலும் அதுக்கு காரணம் ஏகாதிபத்தியச் சதிதான் எனச் சொல்லுற ஆக்கள். தலைக்குப் போடுற தொப்பியில இருந்து காலில போடுற சப்பாத்து வரைக்கும் அமரிக்கன்ர நைக்குக்கு நாயா அலையிற ஆக்கள். முதலாளித்துவ அரசுகள் குடுக்கிற சலுகைகள் முழுவதையும் முக்கி முக்கி விழுங்கிற ஆக்கள். எதுக் கெடுத்தாலும் முதலாளித்துவ கைக்கூலிகள், ஏகாதிபத்திய கைக்கூலிகள் என வரிக்கு வரி முழங்கித் தள்ளுவினம். ஊரில வெள்ள வேட்டி கட்டி வெள்ளாளக் கொம்மினிசம் பேசினவயல் இல்லாத இடத்துக்கு வெளிநாடுகளில மூக்கு முட்டத் திண்டு போட்டு ரவுசர் போட்ட வெள்ளாளக் கொம்மினிசம் பேசித்திரியினம்.

இவர்கள் பாருங்கோ புலிகளையும் திட்டுவார்கள்…! புலி அராஜகத்தை அம்பலப் படுத்துபவர்களையும் திட்டுவார்கள்…! சாதி ஒழிய வேணும் எண்டு கத்துவார்கள்…! சொந்தச் சாதியைச்சேர்ந்த பெண்ணுக்கே வாழ்க்கை குடுக்க சாதிக்குப்பின்னால் அலைவார்கள்..! இந்துமதத்தை அழிக்கவேணும் எண்டுவார்கள்..! இப்பவும் தங்கட வீட்டுச் சடங்குகளில் பொட்டு வைச்சு, பட்டை பூசி, வேட்டி கட்டி மணி குலுக்குறார்கள்..! தமிழ் தேசியத்தை அழிக்க பெரியாரைக் கூப்பிடுவார்கள்..! தலித் விடுதலைக்கு தமிழ்த்தேசியம் வேணும் எண்டுவார்கள்..! தாங்கள் பேசினால் தலித்தியம் எண்டுவார்கள்;..! தலித்துக்கள் தலித்தியம் பேசினால் பார்ப்பன முத்திரை குத்துவான்கள்..! பெண் விடுதலை பேசுவாங்கள.;.! பெண்ணின் கற்பைக்காக்க கல்வெட்டு அடிப்பாங்கள்..! ஜெ. வி. பி யை இனவாதி எண்டுவாங்கள்..! விடுதலைப்புலியை பறவாயில்லை எண்டுவாங்கள்..! மக்கள் நலன், மக்கள் அக்கறை பற்றி பந்தி பந்தியா எழுதுவாங்கள்..! தேசத்துரோகிகள், மன்னிக்க முடியாத குற்றவாளிகள், முரணற்ற ஜனநாயகம், மக்கள் விரோதிகள் போன்ற பாசிசத்துக்குள் நுழைவதற்கான சொல்லாடல்களையே கக்கிக்கொண்டும் இருக்கிறாங்கள்..! தமக்கு முதல் எதிரி ஏகாதிபத்தியம் எண்டுறாங்கள்..! அந்த ஏகாதிபத்திய பொறிக்குள் சிக்குண்டு கிடக்கிற சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் இன்னும் பலவற்றுக்குள் முதல் எதிரி யாரெனக்கேட்டால் சிறீலங்கா அரசுதான் என்று பேட்டி குடுக்கிறாங்கள்..! இந்துத்துவமா, பவுத்தமா முற்போக்கானது எண்டு கேட்டால் பவுத்தம் என வாய் கிழியப் புலம்பும் இவர்கள் பவுத்தம் செய்யும் ஆட்சி முதல் எதிரியாம்! இந்துக் கோயில் நடத்திச் சாதிகாப்பாற்றும் புலிகள் இரண்டாம் எதிரியாம்!பேட்டியாம் பேட்டி...புண்ணாக்கு..தூ...வெக்கம் கெட்ட புழைப்பு. அது மட்டுமா!!!எல்லாக் கொலைகளையும் கண்டிப்போம் என்பாங்கள் தாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் பாட்டாளி வர்க்கத் தலைமைக்காக கொலைகள் தவிர்க்க முடியாதது என்பார்கள்.இவர்களுடைய சொதப்பலுக்கு அளவே கிடையாது. ஒரே நேரத்தில ஜோர்ஜ் புஸ்சுக்கும், பின்லாடனுக்கும், பிரபாகரனுக்கும் அட்வைஸ் பண்ணுறதில வலு விண்ணர்கள். எங்கட ஊர் சாத்ரியர் களுக்கும் இவையலுக்கும் வித்தியாசம் கிடையாது. இரண்டு தரப்பும் கற்பனைதான். சாத்ரிமார் வயித்துக்காக. இதுகள் விளம்பரத்துக்காக.

வியாபாரப் புலிகள்
இந்தப் போராட்டத்தின்ர முக்கிய புள்ளிகளே இவையல்தான் பாருங்கோ. எரிஞ்சவன் வீட்டில புடுங்கிற வரையும் லாபம் எண்டதுதான் இவையின்ர அடிப்படைக் கொள்கை. ஊரில சனம் சாகச் சாக இவைக்குச் சரியான சந்தோசம். ஆனால் கண்ணைக் கசக்கி மூக்குச் சிந்தி சிவாஜிகணேசன் லெவலுக்கு நடிப்பினம். எல்லாம் ஓவர் அக்டிங்தான். ஆனாலும் அதிகமான லாபம் அடிக்கிற ஆக்கள் இவைதான். யாப்பாண மிளகாத்தூள், யாப்பாண வெங்காயம், யாப்பாணப் புடலங்காய், யாப்பாண அல்வா, பகோடா மாதிரி யாப்பாண மூளையை சிதற விடாமல் சீதனம், சாதி, வேலிச் சண்டை, வெறிச் சண்டை போன்ற சகலதையும் வித்துக் காசாக்கிற ஆக்கள் இவையல்தான்.

என்ன கவலையெண்டால... அங்க சாகிற சனம் முழுக்க ஏழைகளும் எளியதுகளும்தான். இந்த வியாபாரிகள் குடும்பத்தில சித்தப்பன், பெரியப்பன், பூட்டன், பாட்டன் எல்லாரையும் வெளிய கொண்டு வந்திட்டு காசை அள்ளிக்குடுத்து தலைவரை ஏவி விட... ஏவி விட... இஞ்ச வியாபாரம் பெருகும் மொத்தத்தில் இவங்கள் சவப்பெட்டி வியாபாரிகள்.

விவேகப் புலிகள்
விவேகப் புலிகள் வித்தியாசமானவையுங்கோ! பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் சீவியத்தைக் கொண்டு பொவினம் இவையளுக்கு விளம்பர ஆசையோ வியாபார ஆசையோ இருக்காது. மறைஞ்சு நிண்டே எல்லா அலுவலும் பாப்பினம். இவையளுக்கு ஒரே ஒரு தேவைதான் என்ன தெரியுமோ... யாழ்ப்பாண சமூக அமைப்பு அப்படியே இருக்க வேணும். இவையள் புலிகளுக்கும் அட்வைஸ் பண்ணுவினம் சிறீலங்கா அரசாங்கத்துக்கும் அட்வைஸ் பண்ணுவினம். தங்கட தங்கட பிள்ளையளின்ர வாழ்க்கை வசதிகள வளப் படுத்திறதில சரியான அக்கறையா இருப்பினம். தங்கட பிள்ளையள திறமையான இங்கிலிஸ் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிப்போட்டு சீவியத்திற்கு வழியில்லாததுகள போராடப் போகச் சொல்லுவினம். எல்லாப் பக்கத்தாலயும் நல்ல புள்ள பேர் எடுத்துக்கொண்டு அமைதியா வாழுவினம். இவையள் வந்து பாருங்கோ தங்கட கருத்துகள ஆரேன் இழிச்ச வாயன் மூலமாக வெளியில கொண்டுவர முயற்சிப்பினம். இவையள் தங்கள  புத்திஜீவகள் மாதிரியும் எந்தக் கறையும் படாதவையல் மாதிரியும் நினைச்சுக் கொண்டிருப்பினம். எல்லாம் ‘லீமாதான்’ யாராக இருந்தாலும் அதிகாரத்துக்கு வந்தால் அவையலப்பாத்து பல் இழிப்பினம். சாதி, சமயம் பாக்கிறதில்ல எல்லாரும் ஒண்டுதான் என்பினம். வீட்டுக்குள்ள சாதியையும், மதத்தையம் கண்ணை இமைபோல் காப்பாற்றிக் கொண்டிருப்பினம்.

வெகுளிப் புலிகள்
இவர்கள் மிகவும் அப்பாவிகள பாருங்கோ. தலைவரை மட்டுமே ரசிப்பினம் புலிகளது ஊடகங்களை மட்டுமே பாப்பினம், கேப்பினம், படிப்பினம் அதில சொல்லுவது மட்டுமே வேதமாக ஏற்றுக் கொள்ளுவினம். தலைமை விசுவாசம் கண்களை மறைக்கிறதால வேற எதையுமே உள்வாங்க மறுப்பினம். விடுதலைப்புலிகளுக்கு உரமாக இருந்து வளக்கிற பசளையா மட்டும்தான் இருப்பினம். இவையளின்ர உழைப்பை உண்டு கொழுக்கிற ஆக்கள்தான் வியாபாரப் புலிகள். இந்த வெகுளிப் புலிகளில தலித்துக்கள் நிறையப்பேர் அகப்பட்டுப்போய் இருக்கினம். தமிழீழம் கிடைச்சால் சாதிப்பிரச்சனை ஒழிந்து போய்விடுமென விவேகப் புலிகள் கிளப்பிவிட்ட புலுடாக்கள உண்மையென நம்பி மாடா உழைக்கினம். தலைவர் எப்படியும் சாதிப்பிரச்சனையை ஒழிச்சுப் போடுவார் என கனவு காணுகினம். இப்ப பூட்டின எ9 பாதையை திறக்க முடியாமல் தவிக்கிற தலைவர் எப்படி ஆயிரமாண்டுக்கு மேலாக தொடருகிற சாதிக் கொடுமையை ஒழிக்கப்போறார் என கேள்வி கேட்க இவைக்கு அறிவு இல்லாமல் போச்சு! இப்ப ஜரோப்பாவில எல்லாரையும் சமனா நடத்துறாங்களாம்.! சாதிப்பிரச்சனை முடிஞ்சுதாம்!! இப்படியெல்லாம் சொல்லி தலித் வெகுளிப் புலிகளை நம்பவைக்கிறார்கள். ஏதோ தங்கட ஆட்சி ஜரோப்பாவில நடக்கிறமாதிரி நினைப்பு!! ஜரோப்பிய அரசியலும் சட்டமும் கொள்கையும்தான் காரணம் குறிப்பா இந்துத்துவ ஆட்சி வெளிநாட்டில இல்லாததும்தான் மிகப் பெரியகாரணம். அதனால்தான் தலித்துகள் கொஞ்சமாவது முன்னுக்கு வரமுடிகிறது எண்ட உண்மை தலித் வெகுளிகள் நினைக்க மறுக்கினம். இருபத்தைஞ்சு வருச ஆயுதப்போராட்டத்துக்கு பிறகும் யாப்பாணம் முழுக்க இடம் பேந்து வன்னி வரை போய்வந்த பிறகும்! எ9 பூட்டி பட்டினிச்சா வந்த பிறகும்! சாதி அமைப்பு மட்டும் அப்படியே இருந்து கொண்ட விசயம் எல்லா மட்டப் புலிகளுக்கும் தெரியும் தெரிஞ்சாலும் கண்டும் காணாதது மாதிரி இருக்கினம். குறிப்பா தலித்துக்கள்தான் இதைப்பற்றி யோசிக்கணும். ‘தானா மாறும் என்பது பழைய பொய்யடா’ தமிழர் பிரச்சனைகள் தமிழர்தான் தீர்க்க வேணுமெண்டது உண்மையானால்... தலித்துக்கள் பிரச்சனையை தலித்துக்கள்தான் தீர்க்க வேணும். கண்டும் காணாது இருப்பதும், நமக்கு ஏன் ஊர் வம்பு என இருப்பதும், யாராவது தீர்க்கட்டும் என இருக்கிறதும், சோம்பேறித்தனம் எனச் சொல்ல ஏலாது வெகுளித்தனம்தான். தலித்துகள் வெகுளிகளாக இருக்கும்வரை சைவ வேளாளருக்கு சக்கரைதான்.

கலாச்சாரப் புலிகள்
இவைகள் தமிழ்ச் சினிமாக்களில வாற காமெடியன்கள் ஊரில சண்டை தொடங்கிய உடனே வேலியும் வேண்டாம், கதியாலும் வேண்டாம், வெள்ளை வேட்டியும் வேண்டாம் ஆள விடால் காணும் எண்ட கணக்கில் புலம் பேந்து விசா போட்ட கையோட டொமிசல் எடுத்து (வீட்டுரிமை பத்திரம்) பிள்ளையார் சிலையும், முருகன் சிலையும், அம்மன் சிலையுமா மாறி மாறி கொண்டு திரிஞ்சு... கடந்த இருபது  வருடத்துக்குள்ள கோபுரங்களும் கட்டி கும்பாபிசேகமும் நடத்தி முடிச்சுப் போட்டினம். குறைஞ்ச விலையில இந்தியாவில ஐயர் மாரக் கொண்டுவந்து அர்ச்சனை, உண்டியல், நேத்தி நிலுவையெண்டு பீஸ் பீசா கடவுளிட்ட பேரம் பேசி  தேரும் திருப்புகளுமா நல்ல உழைப்பு. பீறோ கிளினிங், றெஸ்ரோறன்ட் வேலையளுக்கென அரைச்சாமத்தில எழும்பி ஓடி உழைச்ச காசு அரைவாசியை உண்டியலுக்க போட்டுட்டு ஐயரைப் பார்த்து பல்லக் காட்டி கும்பிடுகினம். கோயில் முதலாளியோ இருந்த இரையில் தண்ணி வென்னியோட குமரியெண்டாலும், கிழவியெண்டாலும், கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தால் சரி எண்ட கணக்கில் ஜாலியான வாழ்க்கை.

வந்து விழுகிற கணக்கில்லாத காசுக்கு இயக்கத்தில இருந்து, இனம் தெரியாதவயல் வரையும போட்டி. மேலும் பாருங்கோ இவையல்தான் ஜரோப்பா முழுக்க கலாச்சார நிகழ்ச்சி நடத்துகினம். இந்த நிகழ்ச்சிகளில முதலும் கடசியுமா வந்து நேரத்தை நிரப்புறவயல்  இந்த பரத நாட்டிய கோஸ்டியினர்தான். இந்த நாட்டியம் தமிழர் கலாச்சாரமாம்! ஊரில சகல கோயில்களிலயும் வந்து ஆடுற கலைஞர்களை பார்த்து சின்னமோளக் காறியள் எண்டு வர்னிச்சு, அதுகளுக்கு ஒரு சொட்டு மதிப்பும் கொடுக்க மாட்டினம.; ஜரோப்பாவுக்கு வந்த உடனே பிள்ளை விரும்புதோ இல்லையோ வில்லங்கத்துக்கு பரதநாட்டியம், அதாவது சின்னமோளம் படிப்பிச்சு பல லட்சம் செலவு செய்து அரங்கேற்றி கலாச்சாரம் காப்பாற்றுகினமாம்! அநியாயக்காசு... உண்ணாச் சொத்து... மண்ணாப் போற கதை இதுதான். தமிழனுக்குத்தான் இந்த நாட்டியத்தைக் காட்டினாலும் பறவாயில்லை வெள்ளக்காரன கூப்பிட்டும் இதைத்தான் காட்டுறாங்கள். வெள்ளக்காரன் எங்களப்போல இளிச்சவாயங்களா? அவங்களுக்கு இந்த நாட்டியம் இந்தியாவின் இந்துக்களின் பரதநாட்டியம் எண்டு தெரியாதா?

ஏதொ தமிழ்க் கலாச்சாரம் இருக்கிற மாதிரியும் அதைக் காப்பாத்துகிற மாதிரியும் விழுந்து... விழுந்து... மாஞ்சு இந்துக் கலாச்சாரத்ததைக் காப்பாற்றிக் கொண்டிருக்கினம். இந்தக் கலாச்சாரப் புலிகளுக்குப் பின்னால இருந்து வேலை செய்யிறதில பெரிய பங்கு விவேகப் புலிகளுக்குத்தான் உண்டு. இவையளுக்கு தெரியும் தாங்கள் தமிழ்க் கலாச்சாரத்தை வளக்கயில்லை எண்டு இந்துக் கலாச்சாரத்தை வளக்குறதுதான் நோக்கம். இந்துக் கலாச்சாரத்தை அழிய விடாமல் பாதுகாத்தால்தான் சாதிக் கலாச்சாராம் அழியாமல் இருக்கும்!! ஐடியா நல்லம்தான்!!எத்தனை நாளைக்கு!! என்னதான் தலை குத்தன அடிச்சாலும் இன்னும் இரண்டு ஜெனரேசனுக்குத்தான் தாக்குப்பிடிக்கும். அதுக்குப்பிறகு இந்துக் கோயில்கள் நூதனசாலையா மாறீடும் மாற்றம் வர லேட்டாகுது எண்டால்... சனங்களுக்கு அறிவும் வர லேட்டாகுது எண்டுதான் அர்த்தம்.

indu_vanakkam                                                                                                

நான் மேல சொன்ன விசயங்களின் ஒட்டு மொத்தக் கலவைதான் தமிழ்த் தேசியம்...தமிழீழ விடுதலை...எக்ஸட்ரா..எக்ஸட்ரா...அரோஹரா

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité