நாவலரும் பைபிளும்
இலங்கையில் இன முரண்பாடும் கல்வியும் என்ற தலைப்பில் இரட்ணஜீவன் ஹீல் அவர்கள் ஏப்ரல் 21ந் திகதி ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினார். மண்டப வாசலில் பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் நிகழ்வு நடந்தது. நிகழ்வில் ஜானகி மற்றும் டேவிட் கெமரோன் உரை நிகழ்தினார்கள். இரட்ணஜீவன் ஹீல் அவர்களின் உரையிலிருந்து சில பகுதிகளை 'தூ', வாசகர்களுக்காக...
இலங்கையில் வாழும் சிங்கள மக்கள் எவ்வாறு தமிழ் மக்களை நோக்குகின்றனர்.அதே போல் தமிழ் மக்கள் எவ்வாறு சிங்கள மக்களை நோக்குகின்றனர் என்ற விடையத்துடனேயே எனது பேச்சு ஆரம்பிக்க வேண்டும். அதை நான் நாசிசம் என்று தொகுத்துக் கூறுவேன்.யாழ் மையவாத இந்து சாதிய மேலாதிக்க நாசிசம் . ஆம் நீயோர்க் தமிழ்ச் சங்கம் இன்றும் தனது இணையத்தளத்தில் கத்தோலிக்கரை தாழ்ந்த சாதியினர் என்று அடையாளப்படுத்துகிறது.
மேற்கு நாடுகளில் இருக்கும் வெள்ளாளர் இவ்வாறு கூச்லிடும் அதே நேரத்தில் வடகிழக்கில் அநேக தமிழ்க் கத்தோலிக்கர்கள் விடுதலைப் புலிகளுக்காக போராடி மடிந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எந்தவொரு தமிழ்த் தலைவரை எடுத்தாலும் அவர்அநேகமாக யாழ்ப்பாண சைவ வேளாளராகத்தான் இருப்பார்....
தமிழ்ப் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் வெள்ளாளர்கள். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறே. (தற்போதைய விடுதலைப்புலிகளின் நிலைப்பாடுக்ள் விதிவிலக்கு.)யாழ்ப்பாணத்தில் ஆயர் வெள்ளாள சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அண்மைக்காலம் வரை பாதிரிமாருக்கும் அதே நிலைமைதான். எனவெ கல்வி, சாதி, அந்தஸ்து ஆகிய மூன்றும் இணைந்து செல்லும் தகமையைக் காணலாம்.
வடகிழக்கு பல்கலைக் கழகங்களில் தராதரம் மிகக் குறைவு. பேராசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. முனைவர் பட்டம் பெற்றோர் மிகக் குறைவு. அநேக மாணவர்கள் குதிரையோடிப் பல்கலைக்கழகம் வருகிறார்கள்.
தேசிய கல்வி நிலையம் ஒரு தனிப்பட்ட இனத்துக்கான கோட்பாடுடன் கூடிய நிலையமாகவே செயற்படுகிறது. பாடசாலைப் புத்தகங்கள் திரிக்கப்பட்டு எழுதப்படுகிறது. பாடப்புத்தகங்கள் சிங்களக் கல்விமான்களால் எழுதப்பட்டமையினாலேயே இனவேறுபாடுகள் புகுத்தப்படுகின்றது.எமது பாடசாலைகளில் நிலை இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிற நிலையிலும் தமிழ் சைவர்களின் யாழ்ப்பாண நாசிசம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
ஆறுமுக நாவலரின் பைபிள் மொழி பெயர்ப்புப் பற்றிய மாயை.17ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே பைபிள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது .18ம் நூற்றாண்டில் முழு பைபிளும் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவில் பாவிக்கப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் கிறிஸ்தவ போதகர்களால் மொழிபெயர்க்கப்பட்ட பைபிளைத் திருத்துவதற்கான முயற்சிகள் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் சமகாலத்தில் நடைபெற்றதாக CKSnkjb மெதடிஸ் பதிவுகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வேலைகளை பீற்றர் பெர்சிவல் மற்றும் பல மிசனறிமார்களால் நடாத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.இவர்களுக்கு பைபிளின் மூல மொழிகளில் ( Hebrew,Latin,greek ) பரீட்சயம் உள்ளதுடன் தமிழும் தெரிந்திருந்தது.
இவர்கள் ஆறுமுகநாவலர் உட்பட பலரை இப்பணிக்கு அமர்த்தியதாக CMS பதிவுகள் காட்டுகிறது இவ்வாறு பாவிக்கப்பட்ட இன்னுமொரு தமிழர் எலியா கூல். இவர்களுடைய வேலை ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்ட பைபிளைத் திருத்துவதாகும் ஈனால் பாடப்புத்தகங்களில் மூல மொழிகளில் எதுவுமே தெரியாத நாவலரால் பெயர்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இன்னொரு தமிழ்ப்புத்தகம் நாவலரால் எழுதப்பட்ட பைபிள் என்கிறது.
இறுதியாக மக்கள் என்ற வகையில் நாங்கள் முழுமையாக அழிந்து போவதற்கு முன்னர் யுத்தம் என்பது நிறுத்தப்பட வேண்டும்.
தகவல் கற்சுறா