இன்று அதிகாலை (1-04-2007) விடுதலைப்புலிகளைச்
இன்று அதிகாலை (1-04-2007) விடுதலைப்புலிகளைச் சேர்ந்த 17 நபர்கள் பிரஞ்சுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய செய்தியை பிரான்ஸ் தேசத்தின் பிரதான தொலைக்காட்சியான தே.எவ்.1 அறிவித்துள்ளது. மேலும் அச்செய்தியின் விபரமாக:
விடுதலைப்புலிகளானது ஐரோப்பிய யூனியனால் பயங்கரவாத இயக்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும். இவர்கள் இலங்கையில் மேற்கொள்ளும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பிரான்சில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பங்களும் வருடம் 2000யூரோ கட்டாயமாக தரவேண்டுமென மிரட்டி பணம் சேர்பதாகவும் அறிவித்துள்ளது. அத்துடன் லாச்சப்பல்
எனும் இடத்திலும் மற்றும் பிற இடங்களிலும் தொழில் புரியும் தமிழர்களிடம் வருடம் 6000 யூரோ மிரட்டி வாங்கப்படுவதாகவும் அது விடயமாகவே 17 விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை விசாரணைக்காக கைது செய்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
to further information http://asiantribune.com/index.php?q=node/5176